பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்த வேன்! காலையில் நடந்தேறிய சோகம்!
erode van accident into keezbavani
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் அவருக்கு சொந்தமான வேன் ஒன்றை ஒப்பந்தம் அடிப்படையில் வாடகைக்கு விட்டு வைத்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல் காலை நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று திரும்பிய வேன் திருப்ப முடியாமல் போன காரணத்தினால் எதிர்பாராதவிதமாக கீழ்பவானி வாய்க்காலில் உள்ள பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் வேனில் இருந்தவர்கள் உடனடியாக கரையேறி உயிர் தப்ப முயற்சி செய்தார்கள். அதில் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் வேனை மீட்டு எடுத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
erode van accident into keezbavani