தமிழகத்திற்குள் இயங்க துவங்கிய கர்நாடக பேருந்து.. ஷாக்கான அதிகாரிகள்.!!
Erode Thalavadi Karnataka Bus Incorrectly run after went shed
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலாகி, பேருந்து மற்றும் இரயில் போன்ற பொதுப்போக்குவரத்து போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமையான நேற்று மதிய நேரத்தில் கர்நாடக அரசு பேருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதிக்கு வருகை தந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியமாக பேருந்து ஓடத்துவங்கியுள்ளது என்ற போலியான தகவல் காட்டுத்தீ போல பரவியுள்ளது.
இந்த விஷயம் தாளவாடி தாசில்தாருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கர்நாடக பேருந்து ஓட்டுனரை எச்சரித்தனர். மேலும், தமிழகத்தில் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கவில்லை என்று கூறியதை அடுத்து, பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Tamil online news Today News in Tamil
English Summary
Erode Thalavadi Karnataka Bus Incorrectly run after went shed