ஒத்தயில் பைக்கில் வந்த பெண்மணி.. கனபொழுதில் மாயம்.. சத்தியமங்கலத்தில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த பெண்மணி கலைவாணி. இவர் அங்குள்ள நம்பியூர் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். 

இருசக்கர வாகனத்தில் வந்த இவர், வண்டியில் இருந்து சாவியை எடுக்காமல் அப்படியே நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், இதனை கவனித்த மர்ம ஆசாமி ஒருவன், வாகனத்தை திருடிச் சென்றுள்ளான். 

இதனை கண்ட பெண்மணி சுதாரித்து அப்பகுதி மக்களிடம் அலறி கூச்சலிடுவே, இதனை கண்ட நபர்கள் விரைந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த மர்ம நபரை துரத்திப் பிடித்தனர். இதனையடுத்து இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த சண்முகவடிவேல் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Sathyamangalam man arrest vehicle robbery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->