#JustIN: தனியார் தொழிற்சாலை பேருந்து - இருசக்கர வாகனம் மோதி விபத்து.. 2 இளைஞர்கள் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


தனியார் பேருந்து - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகேயுள்ள தொப்பம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்களை, ஆலைக்கு சொந்தமான பேருந்து தினமும் அழைத்து வருவது வழக்கம். 

இந்நிலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்களை அழைக்க சென்ற பேருந்து, மீண்டும் ஆலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தது. இதன்போது, தொப்பம்பாளையம் பகுதியில் 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். 

இந்த இருசக்கர வாகனமானது தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில், 2 சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தொப்பம்பாளையம் காவல் துறையினர், வாலிபர்களின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், வாலிபர்கள் யார்? எங்கிருந்து எங்கு சென்று கொண்டு இருந்தார்கள்? என்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Sathyamangalam Bike Bus Accident 2 Youngsters Died on Spot


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->