சத்தியமங்கலம்: ஆதரிக்க குழந்தையும், உறவினர்களும் இல்லை.. வறுமையில் தவித்து, உணவில்லாமல் வயதான தம்பதி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


இளம் வயதிலேயே மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்து, ஆதரவின்றி தவித்து வந்த தம்பதிகள் வறுமையின் பிடியில் சிக்கி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 74). இவரது மனைவி ரத்தினம் (வயது 71). இவர்கள் இருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக அவர்கள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. 

தங்களது மூன்று பிள்ளைகளையும் இழந்த கிருஷ்ண ராஜ் மற்றும் ரத்தினம் தம்பதி, ஜெகதீஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் ஜெகதீஷ் திடீரென உயிரிழந்துவிடவே, குடோன் செயல்படாமல் போனது. இதனால் கிருஷ்ண ராஜுக்கு வேலையும் பறிபோனது. 

வயதான தனக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காததால், கிருஷ்ணராஜ் மற்றும் இரத்தினம் தம்பதியினர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் வேலையில்லாமல் போனதால் உணவு இன்றி தவித்து வந்துள்ளனர். மேலும், ஆதரிக்க பிள்ளைகளும், உறவினர்களும் இல்லாததால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு வந்துள்ளனர். 

இன்று தம்பதி வாழ்ந்து வந்த வீட்டில் காலை 9 மணி வரை கதவு திறக்கப்படாமல் இருப்பதைக்கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சத்தியமங்கலம் காவல்துறையினர், கதவை திறந்து பார்த்த போது இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

இருவரது உடலையும் மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Sathyamangalam Aged Couple Krishna Raj and Rathinam Suicide due to destitution


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->