பசி..சோறு இல்ல..ஜெயில்ல சோறுபோடுவாங்கல்ல..? - சந்தோஷுக்கு சங்கடம்..!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதனால் ரயில் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அங்கே எந்தவிதமான வெடிகுண்டும் இருக்கவில்லை.

இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் அந்த செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்துள்ளனர். அப்போது அந்த செல்போனின் உரிமையாளர் தொலைந்து விட்டதாகவும், யாரோ அந்த எண்ணை பயன்படுத்தி தவறாக பேசியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

தீவிர விசாரணைக்குப் பின்னர் சந்தோஷ் என்ற நபர் போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதி,ல் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தோஷுக்கு இரண்டு திருமணமாகி இரண்டு மனைவிகளும் அவருடன் இல்லையாம்.

ரைஸ்மில்லில் வேலை பார்த்து வரும் அவர், வேலை சுமை அதிகமாக இருப்பதால் வேலையை விட்டு நின்றுள்ளார். எனவே, சாப்பிட மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் சிறையிலடைத்து உணவு தருவார்கள் என்று தான் இவ்வாறு செய்தேன் என சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்ட காவல்துறையினர் சந்தோஷ் எண்ணப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode railway station balm alert


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->