சத்தியமங்கலம்: திருமணம் ஆகாத ஏக்கத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து நிலைய வளாகத்தில் தற்கொலை.!!
Erode Puliampatti Bus Stand Govt Bus Driver Ramani Aged 35 Suicide Drinking Poison due to Un Marriage Issue
திருமணம் ஆகாத ஏக்கத்தில் 35 வயது அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து நிலைய வாரச்சந்தை வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்தில், 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சோதனை செய்கையில், இறந்து கிடந்தவரின் உடல் அருகே விஷ பாட்டில் இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று எண்ணிய காவல் துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சின்னக்கள்ளிப்பட்டி பகுதியை சார்ந்த ரமணி (வயது 38) என்பதும், அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
35 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்து வந்த ஓட்டுநர் ரமணி, தனக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளார். பின்னர் வாழ்க்கையை மதுபான பழக்கத்தால் இழந்துவிட்டோமோ? என்ற மன வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Erode Puliampatti Bus Stand Govt Bus Driver Ramani Aged 35 Suicide Drinking Poison due to Un Marriage Issue