காதலை கைவிட்ட காதலன்.. காதலி எடுத்த விபரீத முடிவால் சோகம்..! - Seithipunal
Seithipunal


தான் காதலித்து வந்த பெண் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், காதலன் தனது காதலை கைவிட பெண்மணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கலையரசி. இவர் தனியார் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், முத்துக் குமாருக்கும் - கலையரசிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, கடந்த எட்டு மாதங்களாக இவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்குள்ளாக, கலையரசியின் ஜாதி குறித்த பின்னணி முத்துக்குமாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் முத்துக்குமார் தனது காதலில் இருந்து பின்வாங்கி, காதலியை விட்டு விலக தொடங்கியிருக்கிறார். காதலனின் விலகளால் மனமுடைந்து போன கலையரசி, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கலையரசியின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள், திடீரென போராட்டம் நடத்தி மகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்த முத்துக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமாரின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். முத்துக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Perundurai Lady Kalaiyarsi Suicide due to Her Love Boy Reject


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->