பிள்ளைகளை நரபலி கொடுக்க முயன்ற தாய், தந்தை, சித்தி, சித்தியின் தோழி என மொத்த கோஷ்டியையும் தூக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியை சார்ந்த ஜவுளி வியாபாரி ராமலிங்கம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்கள் இருவருக்கும் தீபக், கிஷாந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராமலிங்கம் இரண்டாவதாக இந்துமதி என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார். 

இந்துமதியின் தோழியான தனலட்சுமி என்பவரும் ராமலிங்கத்தின் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற 2 சிறுவர்கள், பெற்றோர் தங்களை நரபலி கொடுக்க இருப்பதாகவும், தங்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனின் தாய், தந்தை, சித்தி, அவரது தோழி மற்றும் அடைக்கலம் கொடுத்த நபர் என்று 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், ராமலிங்கத்தின் இரண்டாவது மனைவி இந்துமதி மற்றும் அவரது தோழி தனலட்சுமிக்கு சிவன் - சக்தி போல வேடமிட்டு திருமணம் செய்து பூஜை செய்து வந்ததும் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Parents Make Human sacrifice Death to Child Police Arrest All 21 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->