உடலில் டெஸ்டரை வைத்து பார்த்த எம்பி.! பொதுமக்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், தற்போது உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கும் வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்காக இந்த பணி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், விவசாய நிலங்களில் இவை அமைக்கப்படுவதால் பொதுமக்களும், விவசாயிகளும் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் இந்த மின் கோபுரத்தின் அருகில் நின்றால் கூட மின்சாரம் தாக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு எம்பி கணேசமூர்த்தி அந்த மின் கோபுரத்தின் அருகில் சென்று ஆய்வு செய்தார். மின்கோபுரத்தின் அருகில் நின்றாள் மின்சாரம் உடலில் தாக்க வாய்ப்பு இருக்கின்றதா என ஆராய்ச்சி செய்யும் பொருட்டு ஒரு டெஸ்டரை தனது உடலில் வைத்தார். அந்த போஸ்டரில் விளக்கு எறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இதனை பார்த்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, அவர் இதனை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார். அதன் பின்னர் மக்களிடையே பேசிய அவர், " கோபுரத்தின் அருகில் நின்றவாறு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தால் விளக்கு எரிகிறது. இதனை ஒரு அறிக்கையாக நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கின்றேன். இந்த புகைப்படங்களை வைத்து தான் நான் நீதிமன்றத்தில் பேச இருக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode mp testing himself using tester


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->