குடும்பத்தையே சீரழித்த மதுப்பழக்கம்.. தாய், மகனின் பாசத்தால் அரங்கேறிய சோகம்.!!
Erode Mother and son suicide
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சீனாபுரம் கராண்டிபாளையம் பகுதியை சார்ந்தவர் சென்னிமலை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இறந்துவிட்ட நிலையில், இவரது மனைவியின் பெயர் ருக்மணி (வயது 70). இவரது மகன் முத்துசாமி (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் முடியவில்லை.
முத்துசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், அவருக்கு சொந்தமாக இருக்கும் விவசாய நிலத்தை விற்பனை செய்து மது அருந்தி வந்துள்ளார். மதுபழக்கத்தை கைவிட கூறி ருக்மணி வலியுறுத்தியும், முத்துசாமி மது பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார்.
தனது அன்பு மகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிட்டான் என்று எண்ணி ருக்குமணி வருத்தமாக இருந்த நிலையில், ருக்குமணிக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், வயது மூப்பின் காரணமாக உடல்நலம் குறைந்துகொண்டே சென்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் இருப்பதை விட இறப்பதே மேல் என்று எண்ணிய ருக்குமணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயத்தை அறிந்த முத்துசாமி வீட்டிற்கு வந்து தாயின் உடலை கட்டியணைத்து அழுத்த நிலையில், தாயின் மரணத்திற்கு தனது மதுப்பழக்கம் காரணம் என்று எண்ணியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த 80 அடி வறண்ட கிணற்றில் விழுந்து படுகாயத்துடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Erode Mother and son suicide