ஈரோடு: ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர் தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தினர்.!
Erode Man Sriram Aged 22 Suicide he Audit Online Game Father Condemnation
ஆன்லைன் கேமுக்கு அடிமையான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழைய பூந்துறை சாலை பகுதியை சார்ந்தவர் செல்லத்துரை. இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஸ்ரீராம் (வயது 22). இவர் 9 ஆம் வகுப்பு வரை பயின்றுவிட்டு, தந்தையுடன் பெயிண்டர் பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9 மாதமாக ஸ்ரீராம் செல்போனில் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்ட நிலையில், வீடியோ கேமுக்கு அடிமையாகி இரவிலும் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனால் தந்தை ஸ்ரீராமை கண்டித்து இருக்கிறார்.
இதனைகண்டுகொள்ளாத ஸ்ரீராம் தொடர்ந்து விளையாடுவதிலேயே முனைப்புடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றுவிட, வீட்டில் இருந்த ஸ்ரீராம் கேம் விளையாடியுள்ளார். ஸ்ரீராம் தம்பி இலட்சுமணன் கடைக்கு செண்டிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த போது, வீடு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த இலட்சுமணன் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து வீட்டிற்குள் சென்று பார்க்கையில், ஸ்ரீராம் தூக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஈரோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் விசாரணையில், ஸ்ரீராம் விளையாட்டு அடிமையாகி தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Erode Man Sriram Aged 22 Suicide he Audit Online Game Father Condemnation