இதோ வந்துவிடுறேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு சென்ற கணவன்.. பிணமாக சாக்குமூட்டையில் மீட்கப்பட்ட கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் கொத்துபுள்ளம்பாளையம் பகுதியை சார்ந்தவர் குமார் என்கிற குழந்தைவேல் (வயது 30). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்துமதி (வயது 26). அங்குள்ள நம்பியூர் குமந்தூரில் குழந்தைவேல் ஆட்டோவை இயக்கி வந்துள்ளார். 

நேற்று முன்தினத்தின் போது வெளியே செல்வதாக மனைவி இந்துமதியிடம் கூறிவிட்டு சென்ற நிலையில், மீண்டும் இல்லத்திற்கு திரும்பவில்லை. விரைவில் கணவர் வந்துவிடுவார் என்று மனைவி எண்ணி காத்துகொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள கொட்டுபுல்லாம்பாளையம் ஏரிக்கரை பகுதியில் சாக்கு மூட்டை இருந்த இருந்த நிலையில், சாக்கு மூட்டை ரத்த கரையுடன் காட்சியளித்துள்ளது. இதனையடுத்து இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குழந்தைவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode man murder police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->