புருஷன் வேலைக்கு சென்றதும், கள்ளக்காதலனுடன் ஏகபோக உல்லாசம்.. ஓடஓட விரட்டி பரபரப்பு சம்பவம்.!!
Erode Illegal Affair Man Murder Police Investigation
தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியை சார்ந்தவர் பார்த்தீபன் (வயது 29). இவர் கடந்த சில வருடமாகவே சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள நாட்டம்பாளையம் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் சங்ககிரி - பள்ளிபாளையம் பிரிவு பகுதிக்கு பார்த்தீபன் சென்ற நிலையில், மர்ம நபர்கள் இவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், இரத்த வெள்ளத்தில் தப்பி செல்ல முயற்சித்த பார்த்தீபனை, பெட்ரோல் நிலையம் முன்னதாக வைத்து வெட்டிக்கொலை செய்து கும்பல் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பார்த்தீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், சங்ககிரி புதுவளவு பகுதியை சார்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி பிரியங்கா (வயது 23). இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னதாக இட்டிலி கடையில் பணியாற்றி வந்த நேரத்தில், பார்த்தீபனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதல் உறவாக மலர்ந்துள்ளது.
இதனையடுத்து இருவரும் அலைபேசியில் பேசி வந்த நிலையில், சரத்குமார் பெயிண்டராக பணியாற்றி வந்ததால், பகல் வேளையில் கள்ளக்காதல் ஜோடிகள் ஏகபோக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கள்ளக்காதல் ஜோடி சிக்கிய நிலையில், சரத்குமார் பிரியங்காவின் அலைபேசியை பறித்துள்ளார். இந்த நிலையில், இரண்டு நாட்களாக உல்லாசம் அனுபவிக்க இயலாமல் தவித்த நிலையில், பிரியங்காவை தேடி வீட்டிற்க்கே சென்றுள்ளார்.
அங்கு சரத்குமாருக்கும் - பார்த்தீபனிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், உன்னுடைய மனைவியை என்னுடன் அனுப்பி வை என்று பிரச்சனை செய்துள்ளார். இதனையடுத்து சரத்குமார் இந்த விஷயம் தொடர்பாக பிரியங்காவின் தந்தை மற்றும் பிரியங்காவின் சகோதரருக்கு விஷயத்தை தெரியப்படுத்தவே, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாமனார் தங்கவேல், மைத்துனர் நந்தகுமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Erode Illegal Affair Man Murder Police Investigation