குடிபோதையில் தகராறு செய்த கணவன்.. சம்பவம் செய்த மனைவி.!!
Erode husband murder police investigation
குடிபோதையில் தகராறு செய்த கணவனை, கல்லால் அடித்து கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை சார்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மனைவியின் பெயர் மேரி. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
பிரான்சிஸ் சேவியருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், தினமும் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அனுதினமும் குடும்பத்தினர் பல இன்னல்களை சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல மது அருந்திவிட்டு வந்த பிரான்சிஸ் தகராறு செய்யவே, ஆத்திரமடைந்த மேரி கணவரை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பிரான்சிசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Erode husband murder police investigation