ஈச்சர் வாகனத்தில் எலிபோல சிக்கத்தெரிந்த வாலிபர்.. கொடிகட்டி பறந்த தெய்வத்துணையால் தப்பித்த சுவாரசியம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலை பிரிவில் லாரியொன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி திடீரென மொடசூர் சாலையில் திருப்பவே, லாரியின் இடதுபுறம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தவரின் மீது லாரி மோதியுள்ளது. 

இதனால், லாரியின் முன்பக்க சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கிக்கொள்ளவே, இரு சக்கர வாகனத்தில் வந்தவரும் டயருக்கு அடியில் மாட்டிக்கொண்டு, ஐயோ.. அம்மா... என்று அபயக்குரல் எழுப்பினார். லாரி ஓட்டுனரும் லாரியை உடனடியாக நிறுத்திவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் டயருக்கு அடியில் சிக்கியிருந்த வாலிபரை மீட்டனர். இந்த வீடியோ குறித்த காட்சிகள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Gopi Accident man escape Lucky


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->