ஈரோடு: ஆடு மேய்க்க சென்ற பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


மாடு மேய்த்துக்கொண்டு இருந்த பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்த பயங்கரம் கோபிச்செட்டிபாளையத்தில் அரங்கேறியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பெருமாள் கோவில் புதூர் பகுதியை சார்ந்தவர் மனோகரன். இவர் விவசாயி ஆவார். இவரது மனைவி வசந்தாமணி. இவர்கள் இருவருக்கும் செந்தில் குமார் என்ற மகனும், ராதா மற்றும் லலிதா என்ற 2 மகள்களும் உள்ளனர். செந்தில்குமார் கார்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில், வசந்தமணி தனது ஆடுகள் மற்றும் நாடுகளை அங்குள்ள கீழ் பவானி வாய்க்கால் அருகேயுள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக அழைத்துச்சென்ற நிலையில், சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனையடுத்து, வசந்தாமணியின் கணவர் மனோகரன், மகன் செந்தில்குமார் ஆகியோர் அவரை தேடி சென்றுள்ளனர். இதன்போது, அங்குள்ள விவசாய நிலத்தில் வசந்தாமணி இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்துள்ளார். மேலும், அவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது உறுதியானது.

இந்த விஷயம் தொடர்பாக சிறுவலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வசந்தாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Gobichettipalayam Woman Murder Mystery Police Investigation 2 August 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->