ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சத்தியமங்கலம் விவசாயி... கைகொடுத்த கர்நாடக பாஜக எம்.பி.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் முட்டைக்கோசை பயிரிட்டுள்ளார். 

இதனையடுத்து இந்த முட்டைகோஸ் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், ஊரடங்கு காரணமாக இதனை அறுவடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ காட்சியை இவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

இந்த விஷயத்தை கண்ட கர்நாடக பாஜக எம்பி முட்டைகோஸை கொள்முதல் செய்து கொள்வதாக தெரிவித்ததை அடுத்து, இவர் நன்றிக்கான வீடியோ பதிவு செய்துள்ளார். சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணன் விவசாய பணியாற்றி வரும் நிலையில், இவர் டுவிட்டரில் பதிவு செய்து வீடியோவை பார்த்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா முட்டைகோஸை கொள்முதல் செய்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode former cabbage sales by karnataka bjp MP


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->