கூட்டுக்குடும்பத்தில் சோகம்.. ஒரேயொரு குடும்பத்தில் 5 பேரும் கொரோனாவுக்கு பலியான பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியை சார்ந்த 52 வயது ஆண் மற்றும் அவரின் 47 வயது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இவர்களில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 52 வயது நபரின் தாய், சித்தி, சித்தப்பா ஆகியோரும் கொரோனா காரணமாக சிகிச்சை பலனின்றி பலியாகினர். 

இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குடும்பத்தை சார்ந்த 5 பெரும் அடுத்தடுத்து கொரோனா வைரசுக்கு பலியானது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Family Members 5 Persons died 25 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->