அதிக சரக்கு கேட்டு அலப்பறை.. காவல் நிலையத்தை அதிரவிட்ட குடிமகன்.!! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையை சார்ந்தவர் ரவிசங்கர். 

இவர் ஏற்கனவே மது அருந்தியிருந்த நிலையில், மதுவால் ஏற்பட்ட அரை போதை பத்தாது என கூறி மேலும் மது வாங்க முடிவு செய்துள்ளார். இவருக்கு மதுபானம் மேலும் கிடைக்காத நிலையில், சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு தொடர்பு கொண்டு தனக்கு மது வேண்டும் என்று கூறியுள்ளார். 

மேலும், மதுபானம் வழங்க மறுக்கும் பட்சத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பெருந்துறை காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனையடுத்து, இது குறித்து பெருந்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் மது போதையில் மல்லாட்டம் ஆடிய குடிகார ரவிசங்கரை காவல் துறையினர் அன்போடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, போதும் போதும் என்ற அளவிற்கு சாப்பாடு போட்டு சிறப்பாக கவனித்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode drunken monkey thread police station police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->