மனைவியின் நடத்தையில் சந்தேகம்... பிறந்து 20 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியை சார்ந்தவர் மணி. இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகும் நிலையில், இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். 

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக மணியின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவே, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து மணிக்கு, அவரது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், பெண் வீட்டாரிடம் இது தனக்கு பிறந்த குழந்தையில்லை என்று கூறி பிரச்சனை செய்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இருந்த கொடூரன் பச்சிளம் குழந்தையை நீரில் மூழ்க வைத்து கொலை செய்துள்ளான். 

பின்னர் எதுவும் தெரியாதது போல் நாடகமாடவே, காவல் துறையினரின் விசாரணையில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். இதனையடுத்து குழந்தையை கொலை செய்த மணி மற்றும் அவனது சகோதரன் ரஞ்சித் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Culprit Murder Baby due to Wife Affair Doubt 12 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->