கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு... முதல் மாவட்டமாக குணமான ஈரோடு.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக கரோனா தொற்று அதிகளவு உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் முதன் மாவட்டமாக அதிகளவு பாதிப்புடன் ஈரோடு மாவட்டம் இருந்தது. இதனால் இங்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் என தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மெல்ல மெல்ல மாற துவங்கியது. 

இந்த தருணத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அங்கு சிகிச்சை பெற்ற 70 பேரும் பூரண நலன் பெற்று படிப்படியாக இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு முற்றிலும் முடிந்த மாவட்டமாக தமிழகத்தில் ஈரோடு மாறியுள்ளது. அங்கு சிகிச்சை அனைவரும் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். இது அம்மாவட்ட மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode corona virus end successfully of treatment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->