12 வயது சிறுமியை திருமணம் செய்த 31... கம்பிவைத்த சிறைக்குள் தள்ளிய அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பாசூர் பச்சாபாளையம் பகுதியை சார்ந்தவர் இலட்சுமணன் (வயது 32). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோளக்கவுண்டன்பாளையம் பகுதியில் 12 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். 

இந்த சிறுமி பள்ளியில் படித்து வந்த நிலையில், இலட்சுமணன் சிறுமியை திருமணம் செய்து இரண்டு மாதமாக குடும்பம் நடத்தி வருவதாக ஈரோடு குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் நல அதிகாரி பிரியாதேவி சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதியான நிலையில், இலட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Child Marriage Police Investigation 23 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->