விளையாடிக்கொண்டு இருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. அலட்சியத்தால் பறிபோன உயிர்.!
Erode child died police investigation
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன்பாளையம் பகுதியில் பாதாளச் சாக்கடைக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் பிரேம் குமார் என்பவரின் வீட்டிற்கு முன்புறமும் பொக்லைன் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதனால், அந்த சுற்றுச்சுவர் வலுவிழந்து காணப்பட்ட நிலையில், இதனை கவனிக்காமல் பணியை முடித்த மாநகராட்சி அதிகாரிகள், பணியை முடித்து விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், ராம்குமாரின் மகன் குமார் மற்றும் அவரது மகள் ருத்ரப்பிரியா சுற்றுச்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், சுவரானது திடீரென உட்புறமாக சரிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் இருவரும் காயமடைந்து உயிருக்காக அலறி துடித்தனர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் படுகாயமடைந்த குழந்தை பிரியா பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் ஜீவன் குமார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதனையறிந்து ஈரோடு மருத்துவமனைக்கு வந்த குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tamil online news Today News in Tamil
English Summary
Erode child died police investigation