சுஜித்தை தொடர்ந்து மேலும் ஒரு சிறுவன் பலி.! துடி துடித்த பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்திலிருந்த பண்ணைக்குட்டையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார். அவருக்கு சொந்தமான நிலத்தில், விவசாய பயன்பாட்டுக்காக நான்கு  அடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயியின் 4 வயது மகன் ஹர்சித் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான், அப்போது பண்ணைக்குட்டையில் ஹர்சித் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து சிறுவனைக் காணாவில்லை என தேடிய போது, குட்டையில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து பண்ணை குட்டையிலிருந்து சிறுவனை மீட்ட பெற்றோர் பதறி போய் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode child death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->