ஈரோடு: கூலித்தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொலை.. விவசாய தோட்டத்தில் பயங்கரம்.!
Erode Chennimalai Man Murder by Strangers at Farmer Garden Land Police Investigation
தோப்பு பகுதியில் கூலித்தொழிலாளி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையை அடுத்துள்ள வெள்ளோடு கனகபுரம் சாலையில் இருக்கும் காட்டுத்தோட்டம் என்ற பகுதியில், விவசாய தோட்டம் ஒன்று உள்ளது. இந்த விவசாய தோட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வெள்ளோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை சோதனை செய்துள்ளனர். அவரது தலையில் பலத்த காயம் இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து, பெருந்துறை காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்து கிடந்தவர் சென்னிமலையை அடுத்துள்ள இராக்கம்பாளையம் பகுதியை சார்ந்த செல்வராஜ் (வயது 40) என்பது தெரியவந்தது.
செல்வராஜ் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Erode Chennimalai Man Murder by Strangers at Farmer Garden Land Police Investigation