6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 60 வயது காமுகன் அட்டகாசம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியை சார்ந்தவன் கோடிஸ்வரன் (வயது 60). இவன் இரவு காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2019-08-19 அன்று, அங்குள்ள மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து, வீட்டிற்கு வந்தால் சாக்லேட் தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளான். 

சிறுமியும் விபரீதம் புரியாமல் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பதறிப்போன சிறுமி அவனிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் பலனில்லாது, மேலும் அதிக சாக்லேட் கொடுத்தாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். 

இதனையடுத்து, சிறுமி வீட்டிற்கு சென்ற நிலையில், கடந்த 2019-08-21 அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரிக்கையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக கோடிஸ்வரனின் கேடுகெட்ட செயல் தெரியவந்துள்ளது. 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கோடிஸ்வரனை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

நேற்று இறுதி தீர்ப்பு வாசிக்கப்படும் என நீதிபதி ஆர். மாலதி அறிவித்த நிலையில், காமுகன் கோடிஸ்வரனுக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.2 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Ashokapuram Culprit Sexual Torture Child girl 12 May 2021 Erode court Judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->