காதல் தகராறில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை?.. திருவிழாவில் சம்பவம்.. ஈரோட்டில் பரபரப்பு.!
Erode 18 Aged youngster Murder by Gang Police Investigation mystery 4 April 2021
ஈரோடு நகரை சார்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் குமார் (வயது 18). குமார் அங்குள்ள பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க செல்வது வழக்கம்.
இந்த வருட திருவிழாவில் கலந்துகொள்ள குமார் தொட்டியம் அருகேயுள்ள கொத்தவம்பட்டி பகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார். திருவிழாவைத்தொடர்ந்து கோவில் அருகே வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைக்காண குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், தெற்கு ரத வீதி பகுதியில் குமார் செல்கையில், திடீரென குமாரை மறித்த கும்பல் கத்தி, அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்துடன் சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் குமார் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இது தொடர்பாக தகவல் அறிந்த தொட்டியம் காவல் ஆணையர் மோகன் ராஜ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அப்பகுதியை சார்ந்த 5 வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், குமார் முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Tamil online news Today News in Tamil
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Erode 18 Aged youngster Murder by Gang Police Investigation mystery 4 April 2021