காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அதேசமயம் பட்டதாரிகள் (B.E உள்பட), டிப்ளமோ, ஐடிஐ, 12-வது மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்கள் , போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

வயது வரம்பு 18 முதல் 35 வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு 044 - 27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன் பெறுமாறு, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment camp in Kanchipuram district tomorrow


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->