#விழுப்புரம் || 11ம் வகுப்பு மாணவிக்கு நடந்தேறியே கொடூரம்... அண்ணன் உள்ளிட்ட மூவர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


பதினொன்றாம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஈச்சங்குப்பம் கிராமத்தில் தாய் - தந்தையை இழந்த பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், தனது பெரியம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.  கடந்த சில நாட்களாக அந்த பள்ளி சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனால், அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், நான்கு மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சிறுமியிடம் விசாரிக்கும் பொழுது தான் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த சிறுமியின் பெரியம்மா மகனான மோகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், இளையராஜா ஆகிய மூவரும், அந்த சிறுமி தனிமையில் இருக்கும் பொழுது தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலைத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு போலீசார் மோகன், இளையராஜா, வெங்கடேசன் ஆகிய மூவரையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பதினொன்றாம் வகுப்பு சிறுமி மூவரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eleventh grade student collective sexual abuse


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->