வெல்டிங் பணியின் போது கவன குறைவு... பரிதாபமாய் பலியான இருவர்...!
Electricity kills young Boys
செங்கள் சூளை தொழிலாளர் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இருக்கிறது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அங்கு கொட்டை அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. அங்கு வெல்டிங்க் பணியாளர்களான ரமணா(23), ரமணா (22) பணிகளை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த தகரங்களை மிதித்த போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Electricity kills young Boys