திருச்சி: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் தீபன் குமார்(18). இவர் பழனிவேல் என்ற ஒப்பந்ததாரிடம் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தீபன் குமார் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள சரோஜா என்பவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக சுவற்றில் துளையிடும் இயந்திரத்தை எடுத்த போது மின்சாரம் தாக்கி தீபன் குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தீபன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் தீபன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrician killed electrocuted in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->