8 நாட்களுக்கு விடுமுறையை அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம்!
eight days leave for court
தசரா பண்டிகையின் காரணமாக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுக்கப்பட்டுள்ள விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வரும் 9 ஆம் தேதி தாக்கல் செய்யலாம் எனவும், இந்த அவசர வழக்குகள், 10 ஆம் தேதி விசாரிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன், கோவிந்தராஜ், சுவாமிநாதன், சரவணன், புகழேந்தி உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிபதிகளாக அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என, உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் உய்ரநீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர், வேல் முருகன் உள்ளிட்ட நீதிபதிகள் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
eight days leave for court