ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த எடப்பாடி பழனிசாமி!! ஸ்டாலின் மனதில் மாற்றம் ஏற்படுமா?!
edappadi says about stalin
ஸ்டாலின் தனது தந்தையின் மறைவை வைத்து மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக பொய் தகவலை பரப்பி வருகிறார். என்றும் கலைஞர் கருணாநிதியின் புகழுக்கு கலகத்தை விளைவித்து கொண்டிருக்கிறார். இதனை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக கந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்த முதல்வர், "தமிழகத்தில் 65 கோடி ரூபாய் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடனாக வழங்கப்பட்டது. அந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்ட வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மறைவை வைத்து ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடி வருகிறார். மக்களின் அனுதாபத்தை பெற தனது தந்தை என்றும் பார்க்காமல் அதனை அரசியலாக்கி வருகிறார் ஸ்டாலின்" என குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
edappadi says about stalin