யாரு என்னனாலும் சொல்லுங்க.. இதுதான் எங்க முடிவு.. முதல்வர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இந்த கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு பின்னர் பல நலத்திட்ட உதவிகளை செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக கூட்டணி விவகாரம் மற்றும் தனியார் மருத்துவமனை கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர், " எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் எப்படி நடந்ததோ, அதே முறையில் தான் கூட்டணி தொடரும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி தொடரும். 

கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு எவ்வுளவு கட்டணம் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதோ, அந்த கட்டணத்தை விட அதிகளவு வசூல் செய்தால் கட்டாயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy Press meet about Alliance at Thiruvarur 28 Aug 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->