அதிமுக முக்கிய பிரமுகர் மரணம்.. இரங்கல் தெரிவித்த இபிஎஸ், ஓபிஎஸ்..!  - Seithipunal
Seithipunal


ன்று மருத்துவமனையில் உயிரிழந்த பி.எச். பாண்டியனுக்கு,  அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அவர்களது இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க சட்ட ஆலோசகரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வருந்துகிறோம். 

மேலும், கழக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த பி.எச்.பாண்டியன் அ.தி.மு.க தொடக்க காலத்திலிருந்து கொள்கை உறுதிமிக்க தொண்டராக பணியாற்றி இருக்கிறார். இவர் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று அவர் ஆற்றிய பணிகள் அ.தி.மு.க-வுக்கு பேருதவியாக இருந்தது.

அவரது இழப்பு அ.தி.மு.க-வுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக்கவே இருக்கும். பி.எச்.பாண்டியன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழக அமைப்புச் செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy and paneer selvam mourning to p h pandian


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->