எடப்பாடி போட்ட திடீர் உத்தரவு.. கடுப்பான ஓபிஎஸ்.. வாய்ப்பூட்டு போட்டுக்கொண்ட அமைச்சர்கள்..!
edappadi message to admk ministers
சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வருவது ரஜினி பெரியார் குறித்து பேசிய சர்ச்சை பேச்சு தான். ஒரே பேச்சில் லோக்கல் சேனலில் இருந்து நேஷனல் சேனல் வரைக்கும் பேசப்பட்டு விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் குறித்து பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையில், ரஜினியின் இரண்டாவது மகளுக்கு மறுமணம் செய்ய காரணம் பெரியார் தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருந்தார். அவரை தொடர்ந்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியை கடுமையாக சாடி பேட்டியில் பேசி வந்தார். துணை முதல்வர் ஓபிஎஸ் கூட பெரியாரை பற்றி தெரியாமல் ரஜினி பேசுகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார்.
கடந்த 23ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்த ஒரு செய்தி பார்த்தவுடன் கோட்டையில் இருந்தவர்கள் பரபரப்பு அடைந்தன. உடனடியாக செய்தி முதல்வருக்கு கொண்டு சொல்லப்பட்டது. அடுத்த, நிமிடங்களில் அனைத்து துறை அமைச்சர்களுக்கும் முதல்வர் எடப்பாடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதாவது, ரஜினிக்கு எதிராக யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்ற தகவல்தான் அது என்று கோட்டை வட்டாரம் பேசிக்கொள்கிறது. மேலும் இந்த செய்தி தமிழகத்தில் அனைத்து ஊடகங்களுக்கும், முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து செல்லப்பட்டுள்ளது, எனவே இனிமே அமைச்சர்கள் யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
edappadi message to admk ministers