பாமகவின் கோரிக்கைகளில் ஒன்றை நானே முன்னின்று நிறைவேற்றி வைப்பேன்!! எடப்பாடி அதிரடி!!
edappadi campaign in erode
மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுதும் உள்ள அதிமுக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை மாநில நிதியில் இருந்து தமிழக அரசு செயல்படுத்தும். அதனை நானே துவக்கி வைக்கவுள்ளேன்.
அதற்கு நன்றியாக அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று கூறினார். மேலும் பேசிய அவர், தி.மு.க.வை தவிர யாரும் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்கவில்ல என்றும்,
மத்தியில் நல்ல ஆட்சி மலர திறமையான பிரதமர் வர வேண்டும் என்றும், அதற்கு மோடி தான் தகுதியானவர் என்றும் கூறியுள்ளார்.
English Summary
edappadi campaign in erode