'பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை' ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி!!  - Seithipunal
Seithipunal


கரூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வின் சபாநாயகர் தம்பிதுரை ஆதரித்து என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது மக்களிடையே பேசிய அவர், திமுகவினருக்கு பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச அருகதை கிடையாது.

பெண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவது திமுக ஆட்கள்தான். அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்குகின்றனர். ரயிலில் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பிரியாணி உட்பட அனைத்து கடைகளுக்கும் சென்று சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கடைக்காரர்களை தாக்கி விட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் கட்டப்பஞ்சாயத்து செய்து செய்யச் சொல்லிக் கொடுக்கிறார். அவரது தொண்டர்களும் அதையே பின்பற்றுகின்றனர். அரசு நீர் மேலாண்மைத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் முதலாக கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

அதன் பின்னர், அரசு மாவட்டங்களில் ஏரி,குளங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.  ஏழைகளுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கும் கட்சியாக திமுக உள்ளது. ஏழை எளியோர்களுக்கு கிடைக்க இருந்த 2000 ரூபாயை உச்சநீதிமன்றத்தில் வழக்கு திமுக தடுத்துள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது. விவசாயிகளுக்காக எந்த நன்மையும் செய்யாது. திமுக மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த போதும் தமிழகத்துக்காக நலத் திட்டங்களைப் பெற்றுத் தரவில்லை, ஆனால் தம்பிதுரை அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு 'இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edapadi says about stalin in karur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->