அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடர்பாக, முதல்வர் பதில்..!!
edapadi palanisamy speech about athikadavu avinashi scheme
அவினாசி - அத்திக்கடவு திட்டம் வரும் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு வருடாவருடம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்போதுதான் இதற்க்காக அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது என்று தெரிந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்த முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இருக்கிறது.
இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்ட பணிகள் நிறைவுபெற்றது. இதன் பின்னர் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த திட்டத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தின் இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
edapadi palanisamy speech about athikadavu avinashi scheme