5 ஸ்டார் சாக்லேட்டில் நெளிந்துகொண்டு இருந்த புழுக்கள்.! பெற்றோர்களே உஷார்.!! நாமக்கல்லில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் காலாவதி தேதி முடியாத நிலையில் ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அடைய செய்கிறது.

ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில் இயங்கி வரும் கடை ஒன்றில், அந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை வாங்கியுள்ளனர். பின்னர், வீட்டுக்குச் சென்று பிரித்து சாப்பிட முயன்ற போது அதில் நிறைய புழுக்கள் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

இது குறித்து பெற்றோர் சென்று கடையில் கேட்டுள்ளனர். ராசிபுரத்தைச் சேர்ந்த மொத்த விற்பனையானர்களான கிருஷ்ணா ஏஜன்சியில் இருந்து அந்த சாக்லேட்டை தாங்கள் வாங்கியதாகவும் அவர்கள் மீது உணவுப் பாதுகாப்புத்துறையிடம் புகாரளிக்க உள்ளதாகவும் கடைக்காரர் கூறியதாகத் தெரிகிறது.

சாக்லேட்டின் மேலுறையில் அதன் பேக்கிங் தேதி ஜனவரி மாதம் 29 என்றும் ஒன்பது மாதத்துக்குள் அதனை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் சாக்லேட் காலாவதி ஆக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் புழுக்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthwarm in 5 star chocolates at namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->