தமிழகத்தில் அதிகாலை முதல் வெளுத்த மழை...அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கப்போகும் பகுதிகள்!
early morning onwords rain chennai
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் மழைக்கு பெய்யலாம். வட கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், சென்னை பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அண்ணா சாலை, அண்ணா நகர், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.
சில இடங்களில் தற்போது வரை லேசான மழை பெய்து வருகிறது.
English Summary
early morning onwords rain chennai