மதுபோதை உச்சம்... மின்கம்பியில் ஏறி பணம் கேட்டு மிரட்டிய போதை ஆசாமி..!!
Drunken Monkey tread for peoples and police upon form electric poll
தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கத்தால் மூடப்பட்டு இருந்த மதுபான கடைகள் சென்னையை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் திறக்கப்பட்டது. மேலும், 43 நாட்களாக மது அருந்தாமல் இருந்த குடிமகன்கள், இப்படியே பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்ற நிலைக்கு வந்தனர்.
இந்த நிலையில், மே மாதம் 7 ஆம் தேதி சமூக இடைவெளி மற்றும் தகுந்த பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய, அரசு மதுபான கடைகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. கடையை திறந்ததும் குடிமகன்கள் மதுபானத்தை வாங்கி குவித்து வந்த நிலையில், பல சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் வாலிபர் மின் கம்பத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கீழரத வீதியில் போதையில் வாலிபர் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
மேலும், அங்கிருந்த மின் கம்பத்தில் ஏறி மின்சார கம்பியை பிடிக்க போவதாக மிரட்டல் விடுத்த நிலையில், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, போதை வாலிபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Drunken Monkey tread for peoples and police upon form electric poll