நிதானமின்றி இரவில் குடிமகன் செய்த காரியம்.. மதுபோதையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
drunken man death by fell into drainage
ஈரோடு மாவட்டத்தில், முழுவது குடித்துவிட்டு மதுபோதையில் நடந்து வந்த நபர் ஒருவர் சாலையில் ஓரம் இருந்த சாக்கடையில் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் உள்ள அந்தியூர் அருகே, ஆதிரெட்டியூர் என்னும் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், சம்பவத்தன்று ஓட்டுநரான இவர் அன்று இரவு குடித்துவிட்டு மதுபோதையில் அந்தியூர் - பர்கூர் சாலையில் நிதானமின்றி நடந்து சென்றுள்ளார்.
பின்னர், ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் தள்ளாடிய இவர் அங்கிருந்த மதகில் சாய்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் நிதானம் இழந்த திருநாவுக்கரசு அருகே ஓடிக் கொண்டிருந்த சாக்கடையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதை தொடர்ந்து, சாக்கடையில் விழுந்து திருநாவுக்கரசு பிணமாகக் கிடந்ததை 2 நாட்களுக்கு பின்னர் தான் அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்து அந்தியூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருநாவுக்கரசு சடலத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
drunken man death by fell into drainage