#கன்னியாகுமரி || மதுபோதையில் அரசு பேருந்து இயக்கிய ஓட்டுனரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பயணிகள்.!
Drunk driving driver handed over to police in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பயணிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பாபநாசத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது.
இந்தப் பேருந்தை இயக்குவதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிரைவரிடம் கேட்டபோது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பேருந்து பணகுடி பகுதியை சென்றபோது பயணிகள், பணக்குடி காவல்துறையிடம் ஓட்டுனர் மது அருந்தி இருப்பது குறித்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் டிரைவரிடம் விசாரணை செய்ததில், இவர் கன்னியாகுமாரி மாவட்டம் சுங்கான்கடை சேர்ந்த ராபர்ட் சிங் என்பதும், மது அருந்தி இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Drunk driving driver handed over to police in kanniyakumari