குடித்துவிட்டு வந்து போலீசாரிடம் பேரம் பேசிய போதை ஆசாமி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், கோவை மாவட்டத்தில் நள்ளிரவில் குடித்துவிட்டு காரை ஓட்டி வந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளார். பின்னர் போலீசாரிடம் சிக்கியது தங்களது லேப்டாப்பை தருவதாக பேரம் பேசியிருக்கிறார்கள். 

காந்திரபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவர் லேப்டாப் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்திருக்கிறார். இவர் நள்ளிரவு நேரத்தில் குடித்து விட்டு காரை ஓட்டி வந்திருக்கிறார். அப்போது, அவர் சிவானந்தா காலனி பகுதிகளில் உள்ள சாலையோர கொடிக்கம்பங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, ஸ்டீபன்ராஜை, மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர், தன் கழுத்திலிருந்த செயினை அறுத்து வீசியவாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ஸ்டீபன்ராஜ், காலை போதை தெளிந்ததும், ஒவ்வொருக்கும் ஒரு லேப்டாப் கொடுத்துவிடுவதாகவும் தன்னை விட்டுவிடுமாறும் கூறி பேரம் பேசியதாக போலீசார்  தெரிவித்துள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drunk and drive in kovai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->