தமிழகத்தில் கருவறுக்கப்படும் கற்பழிப்பு அரக்கர்கள் - சிறுமியை சீரழிக்க முயன்றவனுக்கு மக்களே கொடுத்த தண்டனை.? தரமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாணவியை கற்பழிக்க முயன்ற டிரைவரின் வீட்டுக்கு கிராம மக்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தக்கலை அருகே உள்ள வயக்கரை பகுதியில் வசிப்பவர் 26 வயதான வினு. இவர் தக்கலை பகுதியில் வேன் ஓட்டி வந்ததால் அதற்கு வசதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக்கா மண்டபத்தை அடுத்த செம் பருத்திவிளை பகுதியில் ஒரு வீட்டை வாங்கி அங்கு தனியாக வசித்து வந்தார்.

இவரது வீடு வழியாக அந்த பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவி ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார். இதை நோட்டமிட்ட வினு மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சமீபத்தில் அந்த மாணவி அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வந்தார். இதை நோட்டமிட்ட வாலிபர் வினு தனது வீடு வழியாக மாணவி சென்ற போது மறைந்திருந்து அவரது வாயில் துணியை பொத்தி தனது வீட்டிற்கு கடத்திச் சென்றார்.

இதனால் பயந்து போன மாணவி கூச்சல் போட்டதால் அவரை கொன்றுவிடுவதாக வினு மிரட்டியதால் மாணவி மயங்கி விழுந்தார்.

இதற்கிடையில் மகளை காணாமல் அவரது பெற்றோர் அந்த வழியாக தேடி வந்தனர். வினுவின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு தங்களது மகள் மயங்கிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வினுவை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதற்குள் இந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட பொதுமக்களும் அவரை சரமாரியாக தாக்கினார்கள்.

இதற்கிடையில் வினு மாணவியை கடத்தி கற்பழிக்க முயன்றது அந்த பகுதி மக்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியது. அவர்கள் அவரது வீட்டிற்கு திரண்டு சென்று வீட்டை அடித்து உடைத்தனர்.

அங்கு இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் வீட்டிற்கும் தீ வைத்தனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver-tried-to-molestation-her-student-s-home-fire


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->