பெண்ணிடம் ஓட்டுநர் செய்த வேலை... கத்தி ஊரை கூட்டிய பெண்.. வெளுத்துவாங்கிய கிராம மக்கள்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், தஞ்சை மாவட்டத்தில், மதுக்கூர் தாலுகா அருகே இருக்கும் சிரமேல்குடி கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தனது தாய்க்கு நேற்று மதியம்  உணவு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது, அவர் செல்லும் வழியே இரண்டு பேர் அந்த பெண்ணை வழி மறித்து பிரச்னை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்.

Image result for seithipunal

இதை தொடர்ந்து, அந்த பெண் உதவிக்காக கத்தி ஊரைக் கூட்டியுள்ளார். பின்னர், வயலில் வேலை பார்த்தவர்கள் உட்பட அனைவரும் அந்த பெண் இருந்த இடத்திற்கு வந்தார்கள். இதை தொடர்ந்து, அந்த பெண் அவர்கள் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இரண்டு பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. 

இதை தொடர்ந்து, ஊர்மக்கள் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த இரண்டு பேரில் ஒருவர் ஒட்டுநர் என்றும் மது போதையில் அவர் இவ்வாறு செய்து விட்டதாகவும் மற்றொரு நபர் தெரிவித்திருந்தார். அதன் பின் அந்த இரண்டு பேரையும் ஊர்மக்கள் அந்த பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver misbehave with girl in tanjore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->