நாய் குறுக்கே வந்ததால் மரத்தின் மீது மோதிய ஆட்டோ.! ஓட்டுநர் பலி.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் மரத்தின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேடு பகுதியை சேர்ந்த வேணு என்பவரது மகன் ஆட்டோ ஓட்டுநர் சேகர் (58). இவர் நேற்று ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கணக்கன்குப்பம் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சவுட்டுர் பகுதி அருகே வந்த போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார், உயிரிழந்த சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driver killed in Auto accident in Villupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->