பெட்ரோல் பங்கில் வாலிபர் செய்த காரியத்தால் பரபரப்பு.! வைரலாகும் சிசிடிவி காட்சி.!
driver burn in petrol pump
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிராமம் ஒன்றை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவர் தன்னுடைய லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக பூந்தமல்லி அருகே இருக்கும் செம்பரம்பாக்கம் பெட்ரோல் நிலையம் ஒன்றில் லாரியை நிறுத்தி இருக்கின்றார்.
அங்கே பணிபுரியும் சுரேஷ் என்பவர் டீசல் நிரப்புவதற்காக லாரியில் பைப்பை போட்டு விட்டு அதை பிடிக்கும்படி ராஜேஷ்குமார் இடம் தெரிவித்துவிட்டு பில் போட சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
அதற்குள் ராஜேஷ் குமாரின் உடல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அவர் அலறி அடித்தபடி அங்கும் இங்கும் ஓடினார். இந்த காட்சியானது பெட்ரோல் பங்கில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது. தீயை உடனடியாக அணைத்து ஊழியர்கள் ராஜேஷ் குமாரை மீட்டு 30 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது அவர் செல்போன் பயன்படுத்தியதால் தீ பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
English Summary
driver burn in petrol pump